2 மாதமாக தீவிர கள்ளக்காதல்... என்னால் சுந்தரத்தை மறக்க முடியவில்லை... அபிராமி பரபர வாக்குமூலம்

சென்னை: 2 மாதங்களாக தீவிர கள்ளக்காதலில் இருந்ததால் என்னால் சுந்தரத்தை மரக்க முடியவில்லை என்று இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பி ஓடிய அபிராமி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (30). இவர், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி பணியாற்றி வருகிறார். விஜயின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஆகும். சென்னை வங்கியில் வேலை கிடைத்ததால் இவர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.

நாகர்கோவிலில் கைது

நாகர்கோவிலில் கைது இவரது மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவில் தப்பிஓடிய அபிராமியை போலீஸார் கைது செய்தனர். நேற்றைய தினம் கள்ளக்காதலன் சுந்தரத்தை போலீஸார் கைது செய்திருந்தனர்.

வாக்குமூலம்

வாக்குமூலம் 2 பேரையும் இன்று நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர். இதனிடையே அபிராமி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் மூன்றாம் கட்டளையில் உள்ள பிரியாணி கடைக்கு குழந்தைகளுடன் சென்று ஒரு நாள் பிரியாணி சாப்பிட்டேன்.

கடைக்கு அடிக்கடி பிரியாணி

கடைக்கு அடிக்கடி பிரியாணி அப்போது எனக்கும் அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அடிக்கடி அந்த கடைக்கு பிரியாணி வாங்க செல்வேன்.

குழந்தைகளை கொல்ல திட்டம்

குழந்தைகளை கொல்ல திட்டம் இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 மாதங்களாக நீடித்த எங்கள் கள்ளக்காதலை என்னால் விட முடியவில்லை. அதனால் கணவன், குழந்தைகளை கொல்ல திட்டம் தீட்டினேன் என்றார் அபிராமி.

Abirami gives statement that she couldnot leave that illicit relationship though it was started 2 months only.

abirami nagercoil kundrathur அபிராமி நாகர்கோவில் குன்றத்தூர் 

No comments:

Powered by Blogger.