#SriReddy #SRKLeaks ஸ்ரீ ரெட்டி விவகாரம் .... casting couch ? or casting... ouch ?

Image may contain: 1 person, standing
ஸ்ரீ ரெட்டி விவகாரம் .... casting couch ? or casting... ouch ? 

 #SriReddy  #SRKLeaks 

-------------------------------------------------------------------------------------
பெண்கள் விசயத்தில் சுய ஒழுக்கம், ஏக பத்தினி விரதம் , பிறன்மனை மனை நோக்கா பேராண்மை என்பவை மிகப் பெரிய உயர்ந்த விஷயங்கள் .

அதிலும் பெண்களே சுற்றி வந்து கண்ணடித்து மண்டியிடும் சூழல் கொண்ட ஓர் தொழில் உலகில் அது இன்னும் மிக உயரிய புனித மாண்பு .அதில் மாற்றுக் கருத்தே இல்லை .

அடுத்த விஷயம் .. காதலும் காமமும், காதல் அல்லது காமம் இவை காதலுக்கும் காமத்துக்கும் அல்லது அந்த இரண்டுக்காகவும் மட்டுமே நிகழ வேண்டும் .

மனசுக்காகவும் உடம்புக்காகவும் மட்டுமே அவை நடைபெற வேண்டும் . அதுதான் அந்த இரண்டுக்கும் பெருமை . அதை விடுத்து 'நீ எனக்கு உன் உடம்பைக் கொடு . நான் உனக்கு வாய்ப்பு கொடுக்கிறேன்' என்பதே கண்ணியமற்ற செயல் .

அதிலும் இன்னொரு படி மேலே போய் ... வாய்ப்புக்காக மட்டுமே உடம்பைக் கொடுக்கும் ஒரு பெண்ணை எடுத்துக் கொண்டு , வாய்ப்பும் தராமல் ஏமாற்றுவது என்பது அயோக்கியத்தனம் .

இதில் எப்போதும் எந்த வகையிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை . (underlined)

அந்த வகையில் " நீ கேட்ட உடம்பைக் கொடுத்து நான் உன்னை திருப்திப் படுத்தினேன் . ஆனால் நான் கேட்ட வாய்ப்பை கொடுத்து நீ என்னை திருப்திப் படுத்தாமல் ஏமாற்றியது ஏன் ?'' என்ற ஸ்ரீ ரெட்டியின் கேள்வியில் உள்ள proffessional நியாயத்தை , ஸ்ரீ ரெட்டியின் கோணத்தில் பார்த்து நான் ஏற்றுக் கொள்ளவே செய்கிறேன் .

இந்த டீலில் ஸ்ரீ ரெட்டி அவர் பங்குக்கு நேர்மையாகவே இருந்து இருக்கிறார் . ( என்னளவில் அல்லது பொதுவில் இது சரியா என்பதை அப்புறம் பேசுவோம் )

ஆனால்.....

இது தொடர்பான பேட்டிகளில் அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் அவர் மிகவும் விகாரமானவர் மற்றும் விவகாரமானவர் என்பதை வெளிப்படுத்துகிறது. அதோடு அவரது அந்த மேற்சொன்ன கேள்விக்கும் கூட அவர் உண்மையாக இல்லை என்பதும் புரிகிறது .

உதாரணங்கள் ...

1)

"வாய்ப்புத் தருகிறேன் என்று லாரன்ஸ் சொன்னதால்தான் அவருடன் நான் படுத்தேன் . அது இல்லாமல் அவருடன் படுக்க அவர் என்ன என் லவ்வரா? பாய் ஃபிரண்டா ? கணவரா ?... " என்று அடுக்கிக் கொண்டே வந்தவர் .. ( லவ்வர் , பாய் ஃபிரண்டு கூப்பிட்டால் படுத்து விடலாமா என்ற கேள்விக்கு எல்லாம் அவர் ஷாக் ஆகிற ரகமா ? என்று தெரியவில்லை ) அடுத்து " இல்ல.. அவர் கிட்ட சிக்ஸ் பேக் இருக்கா ?'' என்கிறார் .

அப்போ சிக்ஸ் பேக் வைத்துள்ள ஆள் என்றால் அவர்கள் கூப்பிட்டால் இவர் சம்மதித்து இருப்பாரா ? அப்படி சிக்ஸ் பேக் வைத்துள்ள சினிமாக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டு இவருக்கு வாய்ப்புத் தராமல் விட்டு இருந்தால் அது தப்பில்லையா ?

இப்போ பிரச்னை ... பயன்படுத்திக் கொண்டு வாய்ப்புத் தராததா ? இல்லை சிக்ஸ் பேக் இல்லாததா என்பதை ஸ்ரீ ரெட்டி விளக்கினால் இன்னும் பிரச்னை தெளிவாகும் .

"என்ன இது அநியாயமான கேள்வி ... அவள் உடம்பு . அவள் இஷ்டம் . சிக்ஸ் பேக் வைத்து உள்ளவனை அவளுக்கு பிடிக்கும் . அவ சும்மா கூட அவனுக்கு தன்னை கொடுப்பாள் . அது எப்படி குத்தமாகும் ?'' என்று பெரும்பெண்ணியம் பேசுவோர் இருந்தால் அவர்களுக்கு ஒரு கேள்வி.

சிக்ஸ் பேக் அழகா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் . ஆனால் அது பெருமை என்று கருதப்படும் ஒரு சூழலில் சிக்ஸ் பேக் வைத்து இருப்பவனுக்கும் ஒரு ரசனை இருக்கும் அல்லவா ?

அவன் மேல் ஸ்ரீ ரெட்டி ஆசைப் பட்டால் அவன் சம்மதிப்பானா ? ஒரு வேளை ஸ்ரீ ரெட்டி பெரிய தயாரிப்பாளராகவோ இயக்குனராகவோ இருந்து "எனக்கு உன் சிக்ஸ் பேக் உடம்பை கொடுத்தால்தான் உன்னை ஹீரோவாகப் போடுவேன்" என்று சொன்னால் , எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்று நினைப்பவன் கூட , ஸ்ரீ ரெட்டியின் முகத்தை சகித்துக் கொண்டுதானே சம்மதிப்பான் .

அப்படி இருக்க , சிக்ஸ் பேக் இருந்தால் எனக்கு ஓகே . என்று ஸ்ரீ ரெட்டி சொல்வது எல்லாம் எந்த விதத்தில் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலாக இருக்கிறது என்று, பெண் 'ஈய' வாதிகள் சொன்னா , நல்லா இருக்கும் .

2)

"நடிகர் ஸ்ரீகாந்த் ஹைதராபாத்தில் என்னுடன் பேசும்போது நானும் ஆந்திராக்காரன்.. தெலுங்குக்காரன்தான் .. ஆனா தமிழ்நாடு போய் நடிகனா ஆகி நல்லா இருக்கேன் . நீயும் வா . உனக்கு வாய்ப்பு வாங்கித் தர்றேன் . அங்கேயே செட்டில் பண்ணி விடறேன்' என்று ஸ்ரீகாந்த் சொன்னார் (மவனே .. இதுக்கே உனக்கு நல்லா வேணும் ஸ்ரீகாந்த் ).. அதை நம்பித்தான் நான் அவருக்கு என் உடம்பை கொடுத்தேன் . .( என் கூட இருக்கும்போது ஸ்ரீகாந்துக்கு அவர் மனைவி கிட்ட இருந்துஒரு போன்வந்தது . அவர் மனைவிக்கு ரொம்ப பயப்படுவாரு என்றுஒரு வித வன்மத்தோடு எக்ஸ்ட்ரா தகவல்கள் வேறு கொடுக்கிறார்,) மத்தபடி அவர் கூட இருந்த ஒரு நொடி கூட எனக்கு பிடிக்கவே இல்லை . அவரை சுத்தமாக பிடிக்கவே இல்லை "என்று முகம் சுளிக்கிறார் ஸ்ரீ ரெட்டி .

ஆனால் ஸ்ரீகாந்துக்கு தன் உடம்பைக் கொடுத்தது பற்றிய முகநூல் பதிவில் " srikanth .. i love the way , u ate my P - - - Y. " என்கிறார் . ''அவர் கூட இருந்த ஒரு நொடி கூட எனக்கு பிடிக்கவே இல்லை . அவரை சுத்தமாக பிடிக்கவே இல்லை'' என்பது உண்மை என்றால் " srikanth .. i love the way , u ate my P - - - Y. " என்பது எப்படி ? DOUBLE ACT?

3 ) " ஒருவேளை உங்களை உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் எல்லாம் உங்களுக்கு வாய்ப்புக் கொடுத்து இருந்தால் அப்போது அவர்கள் மீது குற்றம சொல்லி இருக்க மாட்டீர்கள் அல்லவா ?''

- என்ற கேள்விக்கு ஸ்ரீ ரெட்டியின் பதில் என்ன தெரியுமா ?

"இப்பவே சொல்லி இருக்க மாட்டேன் . அந்த வாய்ப்புகளின் மூலம் பெரிய ஆள் ஆகி , வளர்ந்து , சம்பாதித்து செட்டில் ஆன பிறகு சொல்லி அவர்களை அசிங்கப்படுத்தி இருப்பேன் " என்பதுதான் .

இது எப்படி இருக்கு ?

" நீ கேட்ட உடம்பைக் கொடுத்து நான் உன்னை திருப்திப் படுத்தினேன் . ஆனால் நான் கேட்ட வாய்ப்பை கொடுத்து நீ என்னை திருப்திப் படுத்தாமல் ஏமாற்றியது ஏன் ?'' என்ற அவரது கேள்விக்கும்

"இப்பவே சொல்லி இருக்க மாட்டேன் . அந்த வாய்ப்புகளின் மூலம் பெரிய ஆள் ஆகி , வளர்ந்து , சம்பாதித்து செட்டில் ஆன பிறகு சொல்லி அவர்களை அசிங்கப்படுத்தி இருப்பேன் " என்ற அவரது பதிலுக்கும் எவ்வளவு முரண்பாடு ? SPLIT PERSONALITY ?

மிக முக்கியமாக ..

நடிகை ஆக வேண்டும் என்றால் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி நடிகை ஆக முயல வேண்டும் . வாய்ப்பு கிடைக்கும் வரை அதே வழியில் முயற்சி செய்ய வேண்டும் . அதுதானே நியாயம் .

நான் உடம்பைத் தருகிறேன் . என்னை நடிகை ஆக்கு .. ஹீரோயின் ஆக்கு என்று போய் நிற்பது என்ன நியாயம் ?

நான் என் உடம்பைத் தருகிறேன் . என்னை இஞ்சினீயர் ஆக்கு .. வக்கீல் ஆக்கு .. டாக்டர் ஆக்கு என்று கேட்க முடியுமா ? செருப்படி விழுமா விழாதா ?

நான் என் உடம்பைத் தருகிறேன் . ஹீரோயின் ஆக்கு என்றால் .. அப்போ ஹீரோயின் ஆக , திறமை தேவை இல்லை .உடம்பைக் கொடுத்தால் போதும் என்று சம்மதித்துப் போகும் ஸ்ரீ ரெட்டி போன்றோரின் IDEALOGYயை எதால் அடிக்கலாம் ?

அப்படிதானே நடக்குது என்ன செய்ய .. என்று நடிப்புக்காக உடம்பைக் கொடுப்பதை நியாயப்படுத்தினால் அப்புறம் எல்லாம் நியாயம்தான் .

" எதோ ஒரு நைட் ஒரு மூடுல வாய்ப்புத் தரேன்னு பொய் சொல்லி தொட்டுட்டோம் .. அதுக்காக ஹீரோயினா போட முடியுமா ? என்ன சார் இது நியாயம் ? படம் ஓட வேணாமா ? ஜெயிக்க வேணாமா ?" என்று அவன் செய்த தவறை அவனும்தான் நியாயப்படுத்துவான் .

ஆரம்பத்திலேயே நான் சொன்னது போல CASTING COUCH கேவலமான ஒன்று . அதில் எப்போதும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை .

ஆனால் இந்த CASTING COUCH விவகாரத்தில் ஹாலிவுட் நடிகைகளிடம் இருந்த நியாயம் , அவ்வளவு ஏன் நம்ம வரலட்சுமியிடம் இருந்த தார்மீகச் சீறல் இந்த அம்மணியிடம் , அதுவும் பேட்டிகளில் தயங்காமல் கெட்ட வார்த்தை பேசுகிற இந்த ஸ்ரீரெட்டிகாருவிடம் இருக்கிறதா ?

NO !

அப்படி இருக்க , எவற்றோடோ இதை எல்லாம் ஒப்பிட்டு பெண் ஈயம் பேசுவோர்களே.... இடத்தைக் காலி பண்ணுங்க . காத்து வரட்டும் !

பின் குறிப்பாகவும் வரும் முன் குறிப்பு :
பெண்கள் விசயத்தில் சுய ஒழுக்கம், ஏக பத்தினி விரதம் , பிறன்மனை மனை நோக்கா பேராண்மை என்பவை மிகப் பெரிய உயர்ந்த விஷயங்கள் . அதிலும் பெண்களே சுற்றி வந்து கண்ணடித்து மண்டியிடும் சூழல் கொண்ட ஓர் தொழில் உலகில் அது இன்னும் மிக உயரிய புனித மாண்பு .அதில் மாற்றுக் கருத்தே இல்லை .

அடுத்த விஷயம் .. காதலும் காமமும், காதல் அல்லது காமம் இவை காதலுக்கும் காமத்துக்கும் அல்லது அந்த இரண்டுக்காகவும் மட்டுமே நிகழ வேண்டும் . மனசுக்காகவும் உடம்புக்காகவும் மட்டுமே அவை நடைபெற வேண்டும் . அதுதான் அந்த இரண்டுக்கும் பெருமை . அதை விடுத்து 'நீ எனக்கு உன் உடம்பைக் கொடு . நான் உனக்கு வாய்ப்பு கொடுக்கிறேன்' என்பதே கண்ணியமற்ற செயல் .

அதிலும் இன்னொரு படி மேலே போய் ... வாய்ப்புக்காக மட்டுமே உடம்பைக் கொடுக்கும் ஒரு பெண்ணை எடுத்துக் கொண்டு , வாய்ப்பும் தராமல் ஏமாற்றுவது என்பது அயோக்கியத்தனம் .

இதில் எப்போதும் எந்த வகையிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை .

- சு. செந்தில் குமரன்

No comments:

Powered by Blogger.